2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி வீதம் 5.4% ஆகப் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் (DCS) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலுவான முன்னேற்றத்திற்கு நாட்டின் முக்கிய பொருளாதார துறைகளின் செயல்பாடு முக்கியப் பங்களித்துள்ளது. அதன்படி, இந்தக் காலகட்டத்தில்: விவசாயத் துறை நடவடிக்கைகள் 3.6% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
கைத்தொழில் துறை நடவடிக்கைகள் 8.1% என்ற குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டியுள்ளன. சேவைத்துறை 3.5% வளர்ச்சி அடைந்துள்ளது என்று DCS தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 4.9% ஆகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.