2025 உயர்தரப் பரீட்சை | இன்று நள்ளிரவு முதல் கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளுக்கு தடை

 


2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையில் இன்னும் நடைபெறாத பாடங்களுக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று (06) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் வழியாக கல்வி வகுப்புகள் நடத்துதல் பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் ஏற்பாடு செய்தல். யூக கேள்விகள் அடங்கிய வினாத்தாள்கள் அச்சிடுதல்

பாடம் தொடர்பான பதாகைகள் மற்றும் பிரசுரங்கள் வெளியிடுதல் என்பவை அனைத்தும் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும், பரீட்சைகள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது.

இவ்வகை மீறல்கள் குறித்து தகவல் தெரிந்தால், அருகிலுள்ள காவல் நிலையம், காவல் தலைமையகம், 119 காவல் அவசர தொலைபேசி எண், அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி எண் 1911

ஆகியவற்றின் மூலம் உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025 க.பொ.த (உயர்தர) பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள், ஜனவரி 12 முதல் 20 வரை, நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை