கொட்டித் தீர்க்கப்போகும் பலத்த மழை: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!



 வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான சூழ்நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உண்டாகும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை