🔴 Update News குடும்பத் தகராறு: தீ விபத்தில் கருகிய தாயும் 15 வயது மகளும் உயிரிழப்பு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

 


அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற குடும்பத் தகராறுடன் தொடர்புடைய தீ விபத்து சம்பவத்தில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் 15 வயதுடைய மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில்,

43 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன், 36 வயதுடைய தாய் கடந்த செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும்,

15 வயதுடைய மற்றொரு மகள், இன்று சனிக்கிழமை (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம், இந்த துயர சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த, 20 வயதுடைய மகன், 66 வயதுடைய பாட்டி ஆகியோர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணைகளின் படி, சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் தாய், இரண்டு மகள்கள் மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்துள்ளனர். சம்பவத்தை அறிந்த 20 வயதுடைய மகன், வீட்டிற்கு வந்து தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் விசாரணைகளில், குறித்த தந்தை அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை தாக்கி வந்ததாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட தகராறுகள் தொடர்பில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் பல முறை முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு, இரு தரப்பினரும் முன்னதாக எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை