ஜனவரியில் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும்! – நாடாளுமன்றில் அறிவிப்பு

 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கால அட்டவணையை, போக்குவரத்துப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று நாடாளுமன்றில் வெளியிட்டார்.

அவரது அறிவிப்பின்படி, ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதிகள் மற்றும் விவரங்கள் பின்வருமாறு:ரயில் மார்க்கம்சேவை ஆரம்பம் / விரிவாக்கம்மலையக மார்க்கம் (பதுளை - அம்பேபுஸ்ஸ)டிசம்பர் 20 முதல் மீண்டும் இயங்கும்வடக்கு மார்க்கம்ஜனவரி 1 முதல் காங்கேசன்துறை வரை நீடிக்கப்படும்புத்தளம் மார்க்கம்ஜனவரி 1 முதல் சேவைகள் சிலாபம் வரை விரிவுபடுத்தப்படும்மட்டக்களப்பு மார்க்கம்ஜனவரி 1 முதல் முழுமையாகத் திறக்கப்பட்டு வழமைக்குத் திரும்பும்மன்னார் மற்றும் தலைமன்னார் மார்க்கங்கள்பெப்ரவரி 1 முதல் முழுமையாக இயங்கும்பிரதி அமைச்சர் மேலும், அண்மைய அனர்த்தங்களால் ரயில் பாதைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இந்தச் சேவைகள் தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

புதியது பழையவை