தையிட்டி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு: 'மக்களின் காணி மக்களுக்கே

 


தையிட்டி விஹாரை தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விஹாரைக்காக சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விஹாரையின் விஹாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விஹாரைக்கு முன்பாக இன்று  போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விரைவில் தீர்வு: தையிட்டி திஸ்ஸ விஹாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஹாராதிபதிக்கு வழங்கப்படும் சான்றிதழ்: விஹாராதிபதிக்கு வழங்கப்படுவது பௌத்த கலாசாரத்தின் அடிப்படையிலான சான்றிதழே என்றும், அது பாடசாலைகளில் வழங்கப்படுவது போன்ற பதவி உயர்வு அல்ல என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

தொடர்புபடுத்த வேண்டாம்: தையிட்டி விஹாரை பிரச்சினையையும் விஹாராதிபதிக்கு வழங்கப்படும் சான்றிதழ் நிகழ்வையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

காணி அளவீடு: விஹாரை அமைக்கப்பட்டுள்ள காணிகள் குறித்து தமது அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணிப் பங்கீடு: அளவீட்டின் அடிப்படையில், விஹாரைக்குச் சொந்தமான காணிகளை விஹாரைக்கு வழங்குவதற்கும், ஏனைய காணிகளை உரிய மக்களிடம் கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுனில் செனவி உறுதிப்படுத்தினார்.

புதியது பழையவை