மத்திய மலைநாட்டிற்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

 


நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organisation - NBRO) கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கையை (வெளியேறுமாறு அறிவுறுத்தல்) விடுத்துள்ளது.இந்த அறிவிப்பு இன்று (டிசம்பர் 18) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், நாளை (டிசம்பர் 19) காலை 8 மணி வரை அமுலில் இருக்கும்.

நிலை 3: சிவப்பு எச்சரிக்கை (உடனடியாக வெளியேறவும் - Evacuate)மண்சரிவு அபாயம் காரணமாக, பின்வரும் பிரதேச செயலக மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:கண்டி மாவட்டம்: தொலுவ, உடுதும்பர, மெததும்பரநுவரெலியா மாவட்டம்: வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, மதுரட்ட

நிலை 2: அம்பர் எச்சரிக்கை (அவதானத்துடன் இருக்கவும் - Be Vigilant)மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படலாம் என்பதால், பின்வரும் பிரதேச செயலக மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:மாவட்டம்பிரதேச செயலகப் பிரிவுகள்கண்டிகங்கவட்ட கோரளை, பாதஹேவாஹெட்ட, அக்குரணை, யடினுவர, தும்பனை, ஹாரிஸ்பத்துவ, பூஜபிட்டிய, பஸ்பாகே கோரளை, ஹதரலியத்த, குண்டசாலை, உடுனுவர, தெல்தொட்ட, பாததும்பர, பன்வில, உடபலாத்த, மினிப்பே, கங்க இஹல கோரளைபதுளைலுணுகல, ஹாலி எல, பதுளை, பஸ்ஸறைகுருணாகல்ரிதிகமநுவரெலியாநுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுமாத்தளைநாவுல, ரத்தோட்டை, அம்பன்கங்கை கோரளை, உகுவெல, வில்கமுவ, யட்டவத்த, மாத்தளை, பல்லேபொல, லக்கலை பல்லேகம

 மட்டம் 1: மஞ்சள் எச்சரிக்கை (விழிப்புடன் இருங்கள் - Be Alert)மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் ஏற்படக்கூடிய மண்சரிவு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்க பின்வரும் பகுதியினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:பதுளை மாவட்டம்: ஹப்புத்தளை, கந்தெகெட்டிய, மீகஹகிவுல, ஊவா பரணகம, வெலிமடை, எல்ல, பண்டாரவளை, சொரணாதொட்ட, ஹல்துமுல்லகுருணாகல் மாவட்டம்: பொல்கஹவெல, அலவ்வ, மாவத்தகம, மல்லவபிட்டியநுவரெலியா மாவட்டம்: தலவாக்கலை, நோர்வுட், அம்பகமுவ கோரளை, கொத்மலை (மேற்கு மற்றும் கிழக்கு)

பொது அறிவுறுத்தல்மலைப்பாங்கான பகுதிகளில் பின்வரும் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்:நிலத்தில் வெடிப்புக்கள் ஏற்படுதல்மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல்கட்டிடங்களின் சுவர்களில் திடீர் வெடிப்புக்கள் தோன்றுதல்

புதியது பழையவை