அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணம் வழங்க Apple நிறுவனம் முன்வருகிறது



 டித்வா' சூறாவளியின் தாக்கத்தால் இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உருவான கடுமையான அனர்த்த நிலைமைகள் குறித்து Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது X சமூக வலைதளத்தில் இதை பதிவிட்டுள்ளார்.

அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு உதவி செய்யவும், சேதமடைந்த பகுதிகளை மீளமைப்பதற்கான பணிகளில் பங்காற்றவும் தேவையான நிதி மற்றும் நன்கொடைகள் வழங்க Apple நிறுவனம் தயாராக இருப்பதாக டிம் குக் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை