பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் கொழும்பு தலைமை நீதவானிடம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய ரூ.225 மில்லியன் வரியைத் தவிர்த்தமை தொடர்பாக, லோலியா ஸ்கின் கேர் (Lolia Skin Care) என்ற (சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனம்) உரிமையாளர் பியூமி ஹன்சமாலிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக திங்கட்கிழமை (15) நீதிமன்றத்தில் அத்திணைக்களம் தெரிவித்தது.
குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக மாறிவிட்டதாகக் கூறப்படும் பியூமி ஹன்சமாலி, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மேலும் கூறப்பட்டது.
உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தினேஷ் பெரேரா, இந்தத் தகவலை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.