நாட்டில் நிலவும் தொடர்ச்சியான மழைக்கால நிலை காரணமாக, 34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வான்பாய்ந்து வருகின்றன.
அநுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ, ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளில் ஒன்று நேற்று இரவு திறக்கப்பட்டதுடன், விநாடிக்கு 1,500 கன அடி நீர் அம்பன்கங்கைக்கு வெளியேற்றப்படுகிறது.
அதேபோல் கண்டி மாவட்டத்தில் உள்ள பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தம்பே நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருகின்றன.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் கொண்டுவட்டுவான் குளம் வான்பாய்வதால் அம்பாறை – இங்கினியாகலை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.