இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் வெற்றியைப் பதிவு செய்தன.
தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடக்கவிருந்தது. இந்நிலையில், கடும் பனிமூட்டத்தால் இந்தப் போட்டி கைவிடப்பட்டது.
இதனால் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா, அடுத்த போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் தொடரை இழக்காது என்பது சிறப்பம்சமாகும்.