பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை – புதிய தகவல்

 


நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களை வாங்குவதற்காக வழங்க திட்டமிடப்பட்ட ரூ.50,000 உதவித்தொகையை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில், இதுவரை 3,665 குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், மொத்தமாக 147,628 குடும்பங்கள் இந்த கொடுப்பனவுக்கு தகுதி பெற்றுள்ளதாக அந்த நிலையத்தின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக்க கூறியுள்ளார்.

இந்த உதவித்தொகையை வழங்குவதற்காக காணி உரிமை அவசியம் இல்லை என்றும், ரூ.25,000 மற்றும் ரூ.50,000 ஆகிய இருவகை கொடுப்பனவுகளுக்கும் இதே நடைமுறை பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டித்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும் காணியையும் இழந்த குடும்பங்கள் தாம் விரும்பும் எந்த மாவட்டத்திலும் குடியேற முடியும் என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க அண்மையில் தெரிவித்துள்ளார்.

மேலும், வேறு மாவட்டங்களில் குடியேற விரும்பும் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை