முக்கிய அறிவிப்பு: 640 பாடசாலைகள் நாளை திறக்கப்படாது!

 


சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (16) மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.எவ்வாறாயினும், ஏனைய மூன்று மாகாணங்களில், மொத்தம் 640 பாடசாலைகள் மாத்திரம் நாளைய தினம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீளத் திறக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், அந்த மாவட்டங்களிலுள்ள ஏனைய பாடசாலைகள் வழமைபோல் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 மாகாண ரீதியான மூடல் விவரங்கள்அதன்படி, பின்வரும் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணம்: 111 பாடசாலைகள்

ஊவா மாகாணம்: 524 பாடசாலைகள்

வடமேல் மாகாணம்: 5 பாடசாலைகள்

 பதுளை மாவட்டத்தில் அதிக பாதிப்புபதுளை மாவட்டத்திலேயே அதிகளவான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன்படி, பதுளை மாவட்டத்தில் நாளைய தினம் திறக்கப்படாத பாடசாலைகளின் வலய ரீதியான விவரங்கள்:கல்வி வலயம்மூடப்படும் பாடசாலைகள் எண்ணிக்கை

மஹியங்கனை 3

பிபிலை 1

பசறை 88

பதுளை 112

வியலுவ 70

வெலிமடை 110

பண்டாரவளை 140

இந்தநிலையில், பாதுகாப்பான நிலையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், தற்போதைய நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர், நாளை தினம் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ அறிவித்துள்ளார்.

புதியது பழையவை