சீரற்ற காலநிலையால் கல்வித் துறையில் ஏற்பட்ட தாக்கம்


சமீபத்திய கடுமையான வானிலை மாற்றங்களால் நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாடசாலைகள் ஏதோவொரு வகையில் சேதமடைந்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டதன் படி, ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த அனர்த்தத்தின் காரணமாகக் கவனிக்கத்தக்க அளவில் பாதிப்படைந்துள்ளனர்.  

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பித்தல்:

எனினும், பாதிப்பு அதிகம் ஏற்படாத பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இந்த மாதம் 16 ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று(8) அல்லது செவ்வாய்க்கிழமை (9) வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை:

மேலும், அனர்த்தத்தின் காரணமாக நடத்தப்படாமல் இருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது என்றும் செயலாளர் தெரிவித்தார்.

புதியது பழையவை