மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் – நீதி கோரி ஆர்ப்பாட்டம்

 


மட்டக்களப்பில் தேவாலயத்துக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, நேற்று வியாழக்கிழமை (25) படுகொலைக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து மாநகர சபை மண்டபம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதில் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை