யாழில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி

 


யாழ்ப்பாணம் - பண்ணை கடற்கரைப் பகுதியில் இன்று மாலை குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இவர்கள் கொக்குவில் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பண்ணை கடலில் மொத்தம் நான்கு பேர் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்கள் எதிர்பாராத விதமாக நீரின் சுழற்சியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், பொலிஸாரின் உதவியுடன் நான்கு பேரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை