வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் கனமழை



 வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று (10) 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை கடக்கின்ற வடகீழ் பருவப்பெயர்ச்சியின் தாக்கத்தினால் மழையுடனான வானிலை அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய நேரிடலாம் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை உயர்ந்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளைகளில் பனி மூட்டத்தைக் காண முடியும் எனவும், வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதியது பழையவை