இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 16,000 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கொழும்பு துறைமுகம் மற்றும் ராகம – பெரலந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில், கொழும்பு துறைமுக காவல்துறையுடன் இணைந்து மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நடத்திய சோதனையில், 1,000 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல், ராகம பெரலந்த பகுதியில், கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து இலங்கை கடற்படை கப்பல் கெமுனு மேற்கொண்ட நடவடிக்கையில், சட்டவிரோதமாக வைத்திருந்த 15,000 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 54 மற்றும் 65 வயதுடையவர்களாகவும், அவர்கள் முறையே பெலியத்த மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளும் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடமும் ராகம காவல் நிலையத்திடமும் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
