நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடி – 3 இந்திய கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில்

 


நெடுந்தீவு கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (27) இரவு சுமார் 9.45 மணியளவில், நெடுந்தீவு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று கடற்றொழிலாளர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்று (28) திணைக்கள அதிகாரிகளால் அவர்களிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைகளின் பின்னர், முற்பகல் சுமார் 11.00 மணியளவில் அவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். சம்பவம் தொடர்பான விவரங்களை ஆராய்ந்த நீதவான், கைது செய்யப்பட்ட மூன்று இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

புதியது பழையவை