36 பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன: நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு

 


நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 36 பெரிய நீர்த்தேக்கங்களும் மற்றும் 46-க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வழிந்து கொண்டிருப்பதாக (வான் பாய்வதாக) நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

மாவட்ட ரீதியாக வான் பாயும் நீர்த்தேக்கங்களின் விபரம் பின்வருமாறு: 

  • அநுராதபுரம்: அனைத்துப் பிரதான நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன. 
  • அம்பாறை: 9 இல் 3 நீர்த்தேக்கங்கள். 
  • பதுளை: 7 இல் 3 நீர்த்தேக்கங்கள். 
  • மட்டக்களப்பு: 4 இல் 3 நீர்த்தேக்கங்கள். 
  • ஹம்பாந்தோட்டை: 10 இல் 4 நீர்த்தேக்கங்கள். 
  • கண்டி: 3 இல் 2 நீர்த்தேக்கங்கள். 
  • குருநாகல்: 10 இல் 4 நீர்த்தேக்கங்கள். 
  • மொனராகலை: 3 இல் 1 நீர்த்தேக்கம். 
  • பொலன்னறுவை: 4 இல் 2 நீர்த்தேக்கங்கள். 
  • திருகோணமலை: 5 இல் 3 நீர்த்தேக்கங்கள். 
  • மன்னார்: 4 இல் 1 நீர்த்தேக்கம். 


நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்சமாகவே காணப்படுகிறது என்று பணிப்பாளர் குறிப்பிட்டார். ஆயினும், எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப வான் கதவுகளைத் திறக்கும் அளவு மாறக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வெளியேற்றப்படும் நீரினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயமோ அல்லது நீர் மட்டம் உயர்வதோ அவதானிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான அறிவிப்புகள் குறித்து அதிக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என எச்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் வலியுறுத்தினார்.

புதியது பழையவை