நிலச்சரிவு அபாயம் காரணமாக ருவன்வெல்ல, ரத்தாகலப் பகுதி மற்றும் ஹட்டனில் உள்ள ரொசெல்ல மாணிக்கவத்தை பிரதேசத்தில் உள்ள குடும்பங்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ருவன்வெல்ல ரத்தாகலப் பகுதியில் உள்ள 11 குடும்பங்கள் ரத்தாகல ஆரம்பப் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை
இதேவேளை, வட்டவளை, ரொசெல்ல மாணிக்கவத்தை பகுதியில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது தொடர்ச்சியான மழை நிலைமை நிலவி வருவதால் சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
