லிட்ரோ எரிவாயு: கொள்கலன்கள் கொள்வனவு குறித்து அரசின் முக்கிய முடிவு

 


லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்குத் தேவையான புதிய திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) கொள்கலன்களை வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நாட்டின் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை தடையின்றி உறுதி செய்யும் நோக்கில், ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 கொள்வனவு விவரங்கள்காலப்பகுதி: 2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு.கொள்வனவு: வால்வு பொருத்தப்படாத 4 வெவ்வேறு அளவுகளில் உள்ள வெற்று எரிவாயு கொள்கலன்கள்.முறை: இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து சர்வதேச அளவில் போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டன.

 ஒப்பந்ததாரர் தேர்வுசமர்ப்பிக்கப்பட்ட 4 விலைமனுக்களை மதிப்பீடு செய்த உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு (High-Level Standing Procurement Committee), குறைந்தபட்ச விலையை முன்வைத்த M/s Sahamitr Metal Pressure Containers Public Co. Ltd என்ற நிறுவனத்தைப் பரிந்துரைத்தது.

 கொள்வனவு செய்யப்படவுள்ள மொத்த கொள்கலன் எண்ணிக்கைஇந்த ஒப்பந்தத்தின் கீழ், பின்வரும் அளவுகளில் கொள்கலன்கள் வாங்கப்பட உள்ளன

இந்தக் கொள்வனவின் கீழ்,
2.3 கிலோகிராம் எடை கொண்ட 120,000 கொள்கலன்கள் 
5.0 கிலோகிராம் எடை கொண்ட 185,000 கொள்கலன்கள் 
12.5 கிலோகிராம் எடை கொண்ட 450,000 கொள்கலன்கள் 
37.5 கிலோகிராம் எடை கொண்ட 7,000 கொள்கலன்கள், என மொத்தமாக 7 இலட்சத்து 62 ஆயிரம் கொள்கலன்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தற்போது முறையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

புதியது பழையவை