அவுஸ்திரேலிய ஹீரோவுக்கு ஒரு மில்லியன் டொலர் நன்கொடை

 


அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பல உயிர்களைக் காப்பாற்றிய அல் அகமதுக்கு, தன்னார்வ அமைப்புகள் மூலம் மில்லியன் கணக்கான டொலர் நன்கொடைகள் வந்து குவிந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடந்த யூதர்கள் நிகழ்ச்சி ஒன்றில், இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 அப்பாவிப் பொதுமக்கள் பலியானார்கள்.

முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த சாஜித் அக்ரம் மற்றும் நவீத் அக்ரம் (24) என்பதும், அவர்கள் இருவரும் தந்தை, மகனான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியைப் பிடுங்கிய அல் அகமதுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் 40 வயதான அல் அகமது, துணிச்சலுடன் செயல்பட்டுப் பல உயிர்களைக் காப்பாற்றிய இந்தக் கதாநாயகனின் சிகிச்சைக்காக, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வசூலித்த ஒரு மில்லியன் டொலர் நன்கொடையை அவரிடம் வழங்கியுள்ளன.

புதியது பழையவை