வடமாகாண கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட பணியின் தேவைக்கான இடமாற்றம் 2026 முறையற்றது எனக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முடிவடைந்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், குறித்த வழக்கு (டிசம்பர் 16) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களும் திரும்பப் பெறப்படும் என எதிர்த் தரப்பினர் சார்பில் முன்னிலையாகியிருந்த அரசு சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து, அந்த வழக்கு இன்று முடிவிற்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.