கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்னியக்க பயணிகள் கதவுகள் – அமைச்சரவை அனுமதி


 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வெளியேறும் முனையத்தில், நான்கு தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவுகளை (E-gates) நிறுவ அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

‘தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கான தேசஎல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ், ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டில் முழுமையாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தன்னியக்க பயணிகள் கதவுகள் நிறுவப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியேறும் முனையத்திலும் இவை அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்த தன்னியக்க கதவுகள் மூலம் பயணிகள் விடுவிப்பு நடவடிக்கைகள் மேலும் விரைவாகவும் சீராகவும் மேற்கொள்ளப்படவுள்ளன.

உள்வருகை முனையத்தில் நிறுவப்பட்டுள்ள நான்கு தன்னியக்க கதவுகளுக்கு இணையாக, வெளியேறும் முனையத்திலும் மேலும் நான்கு தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவுகளை நிறுவுவதன் மூலம், ஒரே முறைமையின் கீழ் பயணிகள் நகர்வு நடவடிக்கைகள் மிகுந்த வினைத்திறனுடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதியது பழையவை