அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுவேலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, எரிபொருள் விலையேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெனிசுவேலாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து தடை செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களை இடைமறிக்க ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, எரிபொருள் விலை 1 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளது.
Brent (பிரெண்ட்) மசகு எண்ணெய் விலைகள் 87 சதத்தால் அல்லது 1.5 சதவிகிதம் உயர்வடைந்து ஒரு பீப்பாய் $59.79 டொலராகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 85 சதத்தால் அல்லது 1.5 சதவிகிதத்தால் உயர்ந்து ஒரு பீப்பாய் $56.12 டொலராக உள்ளது.
அமெரிக்க எண்ணெய் வணிகர்களின் தகவல்படி, இந்தச் செயலால் ஒரு நாளைக்கு 0.4-0.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படலாம். இதனால் ஒரு பீப்பாய்க்கான விலைகள் ($1-2) டொலரால் உயரலாம்.
தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு எதிரான தடையை அமெரிக்கா எவ்வாறு நடைமுறைப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனால் வெனிசுவேலாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் சரிவடைந்துள்ளது.