யாழ்ப்பாணத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினர் கைது

 


யாழ்ப்பாணத்தில் 13 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, மாமன் உறவுமுறை கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு 43 வயது. யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த இந்த நபர், கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தச் சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

இதுகுறித்து கடந்த 08-ஆம் தேதி மானிப்பாய் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் அந்நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

புதியது பழையவை