அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி நிதியில் புறக்கணிப்பு நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஒருவரின் தாய், நிவாரண நிதிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரியினால் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, நேற்று (10) சண்டிலிப்பாய் - கல்லுண்டாய் பகுதியில் வசிப்பவர் ஒருவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் புகாரைப் பதிவு செய்திருந்தார்.
இந்த விசாரணைக்கான புகார், ஒரு கிராம சேவையாளருக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த குறைபாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



