நிலப்பரப்பின் தற்போதைய நிலை மற்றும் தொடர்ந்து பெய்யும் மழையைக் கருத்தில் கொண்டு, இதற்கு முன் வெளியிடப்பட்ட மண்சரிவு அபாய அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட அதிகபட்ச (சிவப்பு) அறிவிப்புகள் திரும்பப் பெறப்பட்டு, தற்போது இரண்டாம் கட்டத்தின் (Level 2) கீழ் 3 மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 'அவதானமாக' இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவதானமாக இருக்க வேண்டிய பிரதேசங்கள்
கண்டி மாவட்டம்: கங்க இஹல கோரளை, பூஜாப்பிட்டிய, உடபலாத, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, தெல்தோட்டை, மெததும்பறை, மினிப்பே, பன்வில, தொழுவ, யட்டிநுவர, ஹாரிஸ்பத்துவ, அக்குறணை, பாததும்பறை, தும்பனே, பஸ்பாகே கோரளை, உடநுவர, உடுதும்பறை மற்றும் பாதஹேவாஹெட்ட.
குருநாகல் மாவட்டம்: ரிதிகம.
நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த, வலப்பனை, மத்துரட்ட மற்றும் நில்தண்டாஹின்ன.
விழிப்புடன் இருக்க வேண்டிய பிரதேசங்கள்
கீழ்க்கண்ட பிரதேச செயலகப் பிரிவுகள் கட்டம் 1 (Level 1) இன் கீழ் 'விழிப்புடன்' இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன:
பதுளை மாவட்டம்: ஊவ பரணகம, பதுளை, ஹாலி-எல, மீகஹகிவுல, ஹல்துமுல்ல, கந்தகெட்டிய, பசறை, சொரணாதோட்ட, எல்ல, வெலிமடை மற்றும் லுணுகலை.
குருநாகல் மாவட்டம்: மல்லவபிட்டிய, பொல்கஹவெல, மாவத்தகம மற்றும் அலவ்வ.
மாத்தளை மாவட்டம்: உக்குவளை, இரத்தோட்டை மற்றும் மாத்தளை.
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, அம்பகமுவ கோரளை, நோர்வுட் மற்றும் தலவாக்கலை.
