சர்ச்சைக்குரிய தடுப்பூசி குறித்து இந்திய நிறுவனத்தின் அறிவிப்பு

 


சர்ச்சைக்குரிய மருந்துகளை சர்வதேச தரத்தில் உள்ள ஆய்வகத்தில் (International Standard Laboratory) பரிசோதனை செய்யுமாறு, சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனம் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

'மான் பார்மசியூட்டிகல்ஸ்' என்ற அந்த இந்திய நிறுவனம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (NMRA), அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியவற்றுக்கு நேற்று (19) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்தப் பரிசோதனைகளுக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்கத் தமது நிறுவனம் தயாராக உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக, 'அத தெரண' வினவியபோது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், 'மான் பார்மசியூட்டிகல்ஸ்' நிறுவனத்தால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரோன்' உட்பட 10 விதமான தடுப்பூசி மருந்துகளின் பாவனைக்கு, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஏற்கனவே தற்காலிகத் தடை விதித்துள்ளது.

புதியது பழையவை