இரண்டு நாட்களுக்குக் கனமழை: வளிமண்டலவியல் எச்சரிக்கை

 


கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலனறுவை மாவட்டத்தில் கனமழை பொழியும் என காலநிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை (டிசம்பர் 17) காலை 08.30 மணி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி காலை 8.30 மணி வரை நடைமுறையில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவும் மழை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு

இந்தக் காலகட்டத்தில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, கனமழை, வேகமான காற்று மற்றும் அதிக மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



புதியது பழையவை