Rebuilding Sri Lanka’ நிதிக்கு Prime Land நிறுவனத்தின் 200 மில்லியன் ரூபா நன்கொடை

 


டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், அனர்த்தத்தால் சேதமடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் தொடங்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நிதி உதவிக்கான காசோலையை Prime Land குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராஹ்மனகே மற்றும் இணைத் தலைவர் சந்தமினி பெரேரா ஆகியோர், நேற்று (22) ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் Prime Land குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய மற்றும் பணிப்பாளர் அநுர பத்திரகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை