தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பல இழுவைப் படகுகள் மூலம் இலங்கையின் வடக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்துள்ள இந்திய மீனவர்கள், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு கடலோரப் பகுதிகளில் அவர்கள் தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடல் கொந்தளிப்பு காரணமாக வடக்கு பகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய மீனவர்களின் இந்தச் செயற்பாடுகள் நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
