தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள தாழமுக்கம், இன்று (10) காலை 11.30 மணியளவில், முல்லைத்தீவுக்கு கிழக்காக சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கம், இன்று மாலை நேரத்தில் முல்லைத்தீவுக் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து நாளையளவில் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாட்டின் வானிலையில் இதன் தாக்கம் நாளையளவில் படிப்படியாகக் குறையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,
-
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
-
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நாட்டின் ஏனைய பல பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
மேலும், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள், அதேபோல் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில், மணித்தியாலத்துக்கு 40–50 கிலோமீற்றர் வரை வேகமுள்ள ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.