உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
சாரா ஜெஸ்மின் தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றில் நடைபெற்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் ஆனந்த விஜயபால இந்த விடயத்தை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த தகவல், அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த அவர், சாரா ஜெஸ்மீன் இந்தியாவில் இல்லை. இது தொடர்பான விசாரணைகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில முன்னேற்றங்களும் விசாரணைகளில் கிடைக்கப்பபெற்றுள்ளன.
குற்றவாளிகளுக்கான சரியான தண்டனை வழங்கப்படும். அது தொடர்பான தகவல்களை வெளியிடமுடியாத நிலை காணப்படுகிறது. விசாரணைக்கு தடை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் இவ்வாறான தகவல்களை வெளியிடமுடியாது.
மேலம் சாரா ஜெஸ்மின் மரணமடைந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்து. அவர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அவர் தொடர் தீவிர வீசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.