உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம்! பொதுமக்களுக்கு புதிய சுமை

 


நாட்டில் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் எதிர்வரும் காலத்தில் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் இந்த நிலை மேலும் தீவிரமாகும் என, சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.

மூலப்பொருட்களின் விலை உயர்வு

உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எரிவாயு, முட்டை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், உணவகத் தொழில்துறையை தொடர்ச்சியாக நடத்துவது மிகவும் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போதைய சந்தை நிலவரத்தின் படி,

  • பச்சை மிளகாய் / கறி மிளகாய் – ஒரு கிலோ ரூ.2,000

  • பீன்ஸ் – ஒரு கிலோ ரூ.1,000

  • தக்காளி, கரட் உள்ளிட்ட பல காய்கறிகள் – ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை

விலை நிலவுவதாகவும் ஹர்ஷனா ருக்‌ஷன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தளவு செலவுச் சுமைகள் இருந்தபோதிலும், உணவு மற்றும் பானங்களின் விலைகளை உயர்த்தும் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


புதியது பழையவை