அமைச்சர் விஜித ஹேரத், ஜூடோ நட்சத்திரம் ஆதம் யந்தியேவ் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை

 


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியான “ஸலாம் கப்” (Salam Cup) இன் ஒரு பகுதியை கொழும்பில் நடத்துவது தொடர்பாக, அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போட்டியின் நிறுவனர், பிரபல ஜூடோ வீரர் ஆதம் யந்தியேவ் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில், வியாழக்கிழமை (08) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், இலங்கையில் விளையாட்டுச் சுற்றுலாவை (Sports Tourism) மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

ஸலாம் கப் போட்டியின் ஒரு பகுதியை கொழும்பில் நடத்துவது, இலங்கையின் விளையாட்டுச் சுற்றுலாத் துறைக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் எனவும், சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கையின் அடையாளத்தை உயர்த்தும் ஒரு முக்கிய வாய்ப்பாக இது அமையும் எனவும் ஆதம் யந்தியேவ் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை